சிந்தை அடங்கில்...
கத்தவும் வேண்டாம் கருத்துஅறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல்அற்று இருக்கிலே.
விளக்கம்:
அறநூல்கள் கூறும் மெய்ப்பொருளின் உண்மை உணர்ந்து அறிவும் மனமும் அடங்கப் பெற்றால் வீண் ஆராவாரம் தேவையில்லை. அதே போல, மனம் அடங்கி நிட்டையில் இருக்கின்ற யோகம் கைவரப் பெற்று விட்டால், உரக்க ஒலியெழுப்பி உபதேசம் செய்யவோ ஆடம்பரமாகப் பேசி ஆர்ப்பாட்டம் செய்யவோ வேண்டாம். ஆசையும் பாசமும் அகன்று, பற்றற்று நின்றால், புறத் தூய்மை வேண்டும் என்ற அவசியம் இல்லை (அகத் தூய்மை பெற்று விட்டதால்). மனம் செயல் அற்றுச் சிந்தனை ஒருமுகப்பட்டு விட்டால், மனமும் வேண்டாம். மனமும் வேண்டாம் என்பது மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் தவயோகம் கைகூடிவிட்ட பின் சித்தம் செயலற்று விடும்.
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல்அற்று இருக்கிலே.
விளக்கம்:
அறநூல்கள் கூறும் மெய்ப்பொருளின் உண்மை உணர்ந்து அறிவும் மனமும் அடங்கப் பெற்றால் வீண் ஆராவாரம் தேவையில்லை. அதே போல, மனம் அடங்கி நிட்டையில் இருக்கின்ற யோகம் கைவரப் பெற்று விட்டால், உரக்க ஒலியெழுப்பி உபதேசம் செய்யவோ ஆடம்பரமாகப் பேசி ஆர்ப்பாட்டம் செய்யவோ வேண்டாம். ஆசையும் பாசமும் அகன்று, பற்றற்று நின்றால், புறத் தூய்மை வேண்டும் என்ற அவசியம் இல்லை (அகத் தூய்மை பெற்று விட்டதால்). மனம் செயல் அற்றுச் சிந்தனை ஒருமுகப்பட்டு விட்டால், மனமும் வேண்டாம். மனமும் வேண்டாம் என்பது மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் தவயோகம் கைகூடிவிட்ட பின் சித்தம் செயலற்று விடும்.