Wednesday, 5 December 2012

அறம் பல செய்யவே அமைந்தது வாழ்வு 


ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம்அறி யாரே .


விளக்கம்:

 காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆண்டுகள் ஒவ்வொன்றாகக் கழிந்து கொண்டே போகின்றன. இப்படிப் பல யுகங்கள் போய்விட்டன.கட்டிய மனக்கோட்டைகள் ஆசைக் கனவுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குறைந்து குன்றி விட்டன.சாறு பிழிந்த சக்கை போலத் தங்கள் பெருந்துன்பத்துக்கு இடமான உடல் மெலிந்து தளர்ந்து ஒருநாள் அழிந்தும் போகும். இதை எல்லாம் பார்த்த பிறகும் மக்கள் அறத்தின் பயன் அறியாது இருக்கிறார்களே! உயிர் உள்ளபோதே நல்லறச் செயல்களை மேற்கொள்ள இவர்கள் ஏன் நினைப்பதில்லை? நினைக்க வேண்டும்.


No comments:

Post a Comment