Thursday, 6 December 2012

குரு அருளே திருவருள் 



தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:
 குருநாதரின் அழகிய திரு உருவைக் கண்டு வணங்குதல் அறிவுக்கு விளக்கமாகும். குருவின் திருப்பெயரைத் தியானித்தல் கூட அறிவு மேம்பட உதவும்.குருவின் அருளுரைகளைக் கேட்பது அறிவை விசாலமடையச் செய்யும். இவை எல்லாவற்றையும் விட, அந்த ஞானாசிரியரின் திருஉருவை நெஞ்சில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே, நினைவால் தொழுவதும் அறிவின் விளக்கம் - அறிவுக்கு விளக்கம் ஆகும். தெளிவு என்பதற்கு அறிதல், விளக்கமுறல் எனப் பல பொருள்கள் உண்டு. திருவருளைப் பெறவும் குருஅருளே துணை செய்யக் கூடுமாதலால், குரு அருளின் பெருமை கூறப்பட்டது.

No comments:

Post a Comment