Monday, 12 March 2012

தேட்டை இல்லாத தெய்வ நிலை

தேட்டை இல்லாத தெய்வ நிலை

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன் அவனாமே.

விளக்கம்:

 இரண்டும் கண்களின் பார்வையையும் நடு மூக்கில் வைத்திடில், புருவ மத்தியில் பொருந்தச் செய்தால்; உடலுக்குத் தளர்வும் இல்லை, உடம்புக்கும் அழிவில்லை, ஒரு நிலையில் நிற்காது மனம் தறிகெட்டு ஓடுவதும் இல்லை. உணர்ந்தறியும் நிலையும் இருக்காது. 'தான்' என்ற ஆணவம் இல்லாது போகும். விருப்பமும் இச்சையும் தேடுதலும் இருக்காது. இந்த நிலையில் சீவனே சிவனாகும். நாட்டம் - பார்வை, மூக்கு நுனி - புருவமத்தி. வாட்டம் - வாடுதல். மனை - வீடு. இங்கே உடம்பு. தேட்டம் - விருப்பம்.

No comments:

Post a Comment