கருத்தில் ஒன்றிக் காணுக
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்துள் இருந்திடில்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.
விளக்கம்:
ஆருயிர்களோடு கலந்து அம்மை அவற்றிற்கு அருளுவதைக் கண்கூடாகக் காணவும் இயலும். அவளை மனத்தில் இருத்தித் துதிக்கக் கண்ணெதிரே காணவும் இயலும். அவள் தோன்றக் காணலும் ஆகும். உயிர்களோடு கலந்து இருக்கிற அவள் அவ்வுயிர்களை வழிநடத்திச் செல்வதையும் காணலாம். எனவே அவள் நினைவு நீங்காத வகையில், அவளைக் கருத்தில் இருத்திக் கண்டு கொண்டே இருப்பாயாக.
காணலு மாகுங் கலந்துயிர் செய்வன
காணலு மாகுங் கருத்துள் இருந்திடில்
காணலு மாகுங் கலந்து வழிசெயக்
காணலு மாகுங் கருத்துற நில்லே.
விளக்கம்:
ஆருயிர்களோடு கலந்து அம்மை அவற்றிற்கு அருளுவதைக் கண்கூடாகக் காணவும் இயலும். அவளை மனத்தில் இருத்தித் துதிக்கக் கண்ணெதிரே காணவும் இயலும். அவள் தோன்றக் காணலும் ஆகும். உயிர்களோடு கலந்து இருக்கிற அவள் அவ்வுயிர்களை வழிநடத்திச் செல்வதையும் காணலாம். எனவே அவள் நினைவு நீங்காத வகையில், அவளைக் கருத்தில் இருத்திக் கண்டு கொண்டே இருப்பாயாக.
No comments:
Post a Comment