Thursday, 29 March 2012

வருந்தி அழைத்தால் வருவான்

வருந்தி அழைத்தால் வருவான்

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

விளக்கம்:
 வறண்ட நிலத்துக்கு வான் மழை அவசியம். அதை வாவென்று அழைத்தால் வாராது. மழை பொழிய மேகம் கருக்க வேண்டும். இறையருளும் அப்படித்தான். ஆண்டவன் தானே வலிய வந்து அருள் புரிவான் என்று நம்பி இருப்பர், அவன் அருளைப் பெற முயலுவதில் தயக்கம் காட்டுவர். ஆண்டவன் தானே வலிய வந்தும் அருள்செய்வான். எப்போது? யார் யாருக்கெல்லாம்? பசிக்குப் பால் வேண்டிக் கன்று தாய்ப் பசுவை அம்மா என்று அழைக்குமே, அது போலப் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆண்டவன் அருளைப் பெற அவனை நாடினால் அவனும் அப்படிப்பட்டவர்களுக்கு வலிய வந்து உதவுவான். நானும் என் இறைவனை இந்தப் பரிபக்குவ ஞானம் பெறவே, '' வா.. வந்தருள் செய்!'' என்று வருந்தி அழைக்கிறேன்.

No comments:

Post a Comment