Saturday, 27 April 2013

பக்குவம் எய்தும் பரமானந்தம்



பக்குவம் எய்தும் பரமானந்தம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.


விளக்கம்:
 பிறவிப் பேறு எய்தி, மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, அந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும்போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி எறியும் பக்குவ நிலை எய்தியபோது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பேரின்பம் கண்டேன்.