Tuesday, 20 March 2012

வாச மலர் தூவி வழிபடுக

பூசனை செய்யப் பொருந்தியோர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:
வயிரவ பூசை செய்வோர், உள்ளம் ஒன்றி, ஓராயிரம் போற்றிகள் கூறி, மணமலர் தூவி வழிபடுக. தேன் அபிஷேகம் செய்து, தேனைப் படைத்துப் பூசியுங்கள். சந்தனம், சவ்வாது, புனுகு ஆகிய வாசனைப் பொருள்களை மேலே சாத்துபடி செய்து, வழிபாடு செய்வாயாக. மது - தேன். ஆடுதல் - நீராட்டுதல் போல அபிஷேகம் செய்தல். புழுகுநெய் - புனுகுச் சட்டம். பூசலை - சாத்துப்படி செய்தல், மேல் அணிவித்தல்.

 

No comments:

Post a Comment