தானே சிவன் ஆகும் தவம்
நவமுஞ் சிவமும் உயிர்பர மாகுந்
தவம் ஒன்றில்லாத தத்துவமும் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால்அச்
சிவமென்பது தான்ஆம் எனுந்தெளி வுற்றதே.
விளக்கம்:
அன்பே சிவமாகும். அன்பே சிவமாகி விட்ட பிறகு, அன்பு செய்யும் உயிரே பரம்பொருள் தன்மை பெரும் பரமாகும். அன்பே சிவமாகி விட்ட பின்னர் பசி, பட்டினி கிடந்து புரிகின்ற தவங்கள் தேவயற்றனவாகி விடும். சிவத்தோடு பொருந்தி இருக்கின்ற புண்ணியர்கள் இவர்கள் ஆகையால் அச்சிவப் பரம்பொருளே தான்தான், தானும் அவனும் வேறில்லை என்னும் ஞானத் தெளிவுண்டாகும்.
No comments:
Post a Comment