Tuesday, 27 March 2012

கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்

கண்ணாடி போலக் கடவுளைக் காணலாம்

எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே.

விளக்கம்:
 எண்ணாயிரம் ஆண்டுக் காலம் தவயோகம் புரிந்தாலும், கண் போன்றவனை, உண்ணத் தெவிட்டாத அமுதினைப் போன்றவனைக் கண்கொண்டு கண்டறிந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், சுழுமுனை நாடி உள்ளே ஒளிவடிவாக இருப்பவனை, அகக்கண் கொண்டு பார்த்தால், அப்பரம் பொருள் கண்ணாடியில் காண்பதைப் போல, கண்ணுக்குள் காணக் கலந்து நிற்பான்.

No comments:

Post a Comment