வேண்டியன அருள்வாள்
நேர்தரும் அத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.
விளக்கம்:
நினைத்ததை அருள நேர்படும் அன்னை பராசக்தி, என்ன நிறமுடையவள் என்பதை அறியவேண்டில், அந்த அன்னையின் திரு உருவம், காயாம்பூப் போன்ற கருநீல வண்ணம் கொண்டதாகும் என்பதை அறிக. நினைத்து வழிபடுபவர்க்கு வேண்டியதை அருளும் அன்னை, அவளை நினைத்து நீயும் வழிபட்டுப் பயனடைக. அவள் விரும்பும்படி நடந்து கொள்க.
No comments:
Post a Comment