Thursday, 12 April 2012

அடங்கும் மனது அமுத ஊற்று

அடங்கும் மனது அமுத ஊற்று

உருஅறியும் பரிசு ஒன்றுஉண்டு வானோர்
கருவறை பற்றிக் கடைந்தமுது உண்டார்
அருவரை ஏறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாம்மனம் தீர்ந்துஅற்ற வாறே.

விளக்கம்:
 உள்ளத்துள் உள்ள இறைவனை அறிந்துணரும் உயர்ந்த வழி ஒன்று இருக்கிறது. (அது தெரியாமல்). விண்ணுலகத் தேவர்கள், மந்திர மலையை நாட்டுப் பாற்கடலைக் கடைந்து வெளிப்பட்ட அமுதத்தை உண்டு அதன் மூலம் அழியா நிலை (அமரத்துவம்) பெற்றனர். அவர்கள் மனமாகிய மலை உச்சியிலே ஏறி, அதில் ஊறும் அமுதம் பருகத் தெரியாதவர்கள்.தியானம் செய்யும் சிந்தையில் பரம்பொருளை எண்ணித் தியானிப்பவர் மனம் அடங்கச் சிவசொரூபம் அங்கே தென்படும். இதுவே உரு அறியும் பரிசு.

No comments:

Post a Comment