Thursday, 5 April 2012

காட்டு விலங்குக் கூட்டம் உள்ளம்

காட்டு விலங்குக் கூட்டம் உள்ளம்

திகைக்கின்ற சிந்தைஉள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகிக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டாமே.

விளக்கம்:
 என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறுகின்ற எண்ணத்தில் (காமம், வெகுளி, மயக்கம்) என்னும் மூன்று சிங்கங்கள் குடியிருக்கின்றன. இன்பத்தில் ஆசைப்பட்டு அதை அடைய விரும்பி அலையும் மனத்துள்ளே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு நரிகள் இடங்கொண்டுள்ளன. எதையும் வகைப்படுத்தி என்னும் உள்ளத்துள்ளே ஐம்புலன்களாகிய (மெய், வாய், கண், மூக்கு, காது) ஐந்து குட்டி யானைகள் உலவுகின்றன. உள்ளேயும் வெளியேயும் அலைபாயும் மனத்துக்கு உள்ளது இந்த இரண்டு குணங்களுமே.

No comments:

Post a Comment