தவயோகம் தரும் நலம்
தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும்
வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும்
குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட்டு இருந்திடும் தூங்கவல் லார்க்கே.
விளக்கம்:
தியானத்தில் ஈடுபட்டு இருக்கிறவர்களுக்கு மெய்ப் பொருளாகிய சிவனருள் கிட்டும். சிவனருள் கிட்டுவதால் மாது நல்லாளாகிய சக்தியும் சிவத்தோடு பொருந்தி நின்று நல்லருள் புரிவாள். தவத்தையும் தியானத்தையும் அழிக்க மனதில் குடிகொண்டிருந்த கோபம் அகன்று விடும். மனம் அசையாது சிவ சிந்தையில் நேராகத் தராசு முனை போல நிற்கின்ற தவத்தைச் செய்பவர்கள், இந்த நலங்களெல்லாம் பெற, அவர்கள் மனமும் ஆடாது, அசையாது தராசு முனைபோல் நிற்கும்.
No comments:
Post a Comment