தனித்திரு துதித்திரு
தானே புலன்ஐந்தும் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்ததே.
விளக்கம்:
தாமாகவே மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நமக்கு அடங்கும். நம் சொற்படி இயங்கும். இந்த ஐம்புலன்களும், தாம் விரும்பியபடி, நம்மை இயக்கும் தன்மையை இழக்கும். ஐம்புலன்களும் இதுவரை அவை விரும்பும் வண்ணம் நம்மை ஆட்டுவித்த நிலைமை மாறும். இவை எல்லாம் யாருக்குக் கைகூடும் என்றால், ஐம்புலன் இச்சையில் இருந்து விடுபட்டுத் தனியே சென்று (ஆசாபாசம் அகற்றிப் ) பரம்பொருளை அடைந்து அவன் திருவடி பற்றியவர்களுக்கு, இவையெல்லாம் சித்திக்கும்.
No comments:
Post a Comment