Wednesday, 23 May 2012

சித்தம்பர நடனம்

சித்தம்பர நடனம்

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.

விளக்கம்:
 அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர் ஆவார்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன் இச்சையை விட்டொழித்தவர்கள் இவர்கள். ஆகையால் இவர்கள் தூய்மையானவர், புனிதமானவர் எனலாம். இப்படிப் பட்டவர்கள் மனம் பரவெளியில் பரம்பொருளோடு கலந்து ஆனந்த நடனமிட மகிழ்ந்திருப்பர்.

No comments:

Post a Comment