Wednesday, 7 March 2012

அட்டமா சித்தி

அட்டமா சித்தி

பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்த வாறே.

விளக்கம்:

திக்கெட்டிலும் (எண் திசையும்) தெய்வப் பரம்பொருளைத் தேடி வணங்கிப் பணிந்து, எட்டுத் திக்குகளிலும் இவனே மேலான தெய்வம் எனத் தெரிந்து (துணிந்து), சிவப் பரம்பொருளை வணங்கி, அந்த எட்டுத் திசைகளிலும் எட்டு வகைச் சித்திகளும் அடையப் பெற்று,திக்கெட்டிலும் திகழ எட்டுச் சித்திகளும் எய்தல் இயலுவதாகும். எட்டுச் சித்திகளாவன: சுருங்குதல், விரிதல், பெருத்துக்கனமாதல், இலேசாதல், வேண்டியதைப் பெறுதல், விரும்பியதை மேற்கொள்ளல், வசியமாக்குதல், வேற்றுருக்கொள்ளுதல் என்ற எண் வகைச்சாதனைகள். அணிந்து - அடையப் பெற்று. தணிந்து - நின்று. தாபித்தல் - நிலைபெறச் செய்தல்.

No comments:

Post a Comment