கனவில் நனவு காணும் துரியம்
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில்உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நனவு ஆமே.
விளக்கம்:
ஆருயிர்கள் தன்னை மறந்த அதீத நிலையில் இருப்பதற்கும், அவை கருவில் உருவாகிப் பிறப்பதற்கும், பிறந்த உயிர் உறக்க நிலையில் மயங்கி, புலன் இச்சை வழிச் சென்று விரும்பியதை அடைந்தின்புறும் ஆசை அடைவதற்கும் காரணம், பரம்பொருள் கூட்டுவிக்கும் மாயையேயாம். சுழுமுனையும் அதைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத சூக்கும நிலை எட்டும் பொருந்த நுண்ணுடல் கனவும், பரு உடல் நனவு நிலையும் அடையும்.
அதீதம் - எல்லாம் கடந்தநிலை, துரியம் - உறக்கம், சுழுமுனை - நடுநாடி, சூக்குமம் - நுண்ணுடல், தூலம் - பருமை.
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில்உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்தூலம் அந்நனவு ஆமே.
விளக்கம்:
ஆருயிர்கள் தன்னை மறந்த அதீத நிலையில் இருப்பதற்கும், அவை கருவில் உருவாகிப் பிறப்பதற்கும், பிறந்த உயிர் உறக்க நிலையில் மயங்கி, புலன் இச்சை வழிச் சென்று விரும்பியதை அடைந்தின்புறும் ஆசை அடைவதற்கும் காரணம், பரம்பொருள் கூட்டுவிக்கும் மாயையேயாம். சுழுமுனையும் அதைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத சூக்கும நிலை எட்டும் பொருந்த நுண்ணுடல் கனவும், பரு உடல் நனவு நிலையும் அடையும்.
அதீதம் - எல்லாம் கடந்தநிலை, துரியம் - உறக்கம், சுழுமுனை - நடுநாடி, சூக்குமம் - நுண்ணுடல், தூலம் - பருமை.
No comments:
Post a Comment