புவி ஏழும் ஆட்டும், சிவனோடு கூட!
ஒன்றுஇரண்டு ஆடஓர் ஒன்றும் உடன்ஆட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடன்ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.
விளக்கம்:
ஒன்றாக இருக்கிற ஆகாயம், இரண்டான காற்று இரண்டும் ஒப்பற்ற பரம்பொருளுடன் ஆட, ஒரு பரம்பொருளோடு ஒன்றிய அக்கினி, சூரிய சந்திரர்கள் என்னும் மூன்றுடனே ஏழு உலகங்களும் சேர்ந்தாட, அதனால் 'ஒன்பதும் உடனாட நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும், சந்திர சூரியர்களும் ஆட, சிவம், சக்தி, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், பிரமன், திருமால், நாதம், விந்து ஆகிய ஒன்பதும் உடன் ஆடச் சிற்றம்பலத்தில் பரம் பொருள் மாணிக்கக் கூத்து ஆடினான். இயக்குபவன் இயக்க, அண்ட சராசரம் அனைத்தும் இயங்கும். இது குறித்ததே பஞ்ச பூதம் ஆட, சூரிய சந்திரர் ஆட, பிரமாதி தேவரும் ஆடினர் என்றது.
ஒன்றுஇரண்டு ஆடஓர் ஒன்றும் உடன்ஆட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினால் ஆடவோர் ஒன்பதும் உடன்ஆட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.
விளக்கம்:
ஒன்றாக இருக்கிற ஆகாயம், இரண்டான காற்று இரண்டும் ஒப்பற்ற பரம்பொருளுடன் ஆட, ஒரு பரம்பொருளோடு ஒன்றிய அக்கினி, சூரிய சந்திரர்கள் என்னும் மூன்றுடனே ஏழு உலகங்களும் சேர்ந்தாட, அதனால் 'ஒன்பதும் உடனாட நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும், சந்திர சூரியர்களும் ஆட, சிவம், சக்தி, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், பிரமன், திருமால், நாதம், விந்து ஆகிய ஒன்பதும் உடன் ஆடச் சிற்றம்பலத்தில் பரம் பொருள் மாணிக்கக் கூத்து ஆடினான். இயக்குபவன் இயக்க, அண்ட சராசரம் அனைத்தும் இயங்கும். இது குறித்ததே பஞ்ச பூதம் ஆட, சூரிய சந்திரர் ஆட, பிரமாதி தேவரும் ஆடினர் என்றது.
No comments:
Post a Comment